இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 நவம்பர், 2020

23.11.2020 நிவர் புயலின் நகர்வுகள் | #Nivar cyclones current track | possibilities for a Severe cyclonic storm

0

23-11-2020 நேரம் காலை 9:20 மணி நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டு கூறி இருந்தது போல தென்மேற்கு வங்க்கடல் பகுதியில் #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் (#Depression) உருவாகி இருப்பதாக அதிகார பூர்வ தகவலும் சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியானது #புதுச்சேரி மற்றும் #சென்னை க்கு தென்-தென் கிழக்கு திசையில் முறையே 600 மற்றும் 630 கி.மீ கள் தொலைவில் அது கடலில் நிலைக்கொண்டு இருக்கிறது.தற்சமயம் நான் அதனை Track செய்த பொழுது அதனுடைய அதிகபட்ச சுழற்ச்சியின் வேகம் கிட்டத்தட்ட 29 Knots களாக இருந்தது அடுத்த சில மணி நேரங்களில் அது #ஆழ்ந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் (#Deep_Depression) என்கிற நிலையை அடைந்து விட்டதாக அறிவிப்புகள் வெளியாகும் மேலும் அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் நாம் எதிர்பார்த்து இருந்ததை போல அது மேலும் தீவிரமடைந்து 23-11-2020 ஆகிய இன்று #நிவர் (#Nivar_Cyclone) புயலாக வங்க்கடலில் உருவெடுக்கும்.

நான் முன்பே தெரிவித்து இருந்தது போல அது 25-11-2020 ஆம் தேதி வாக்கில் வட கடலோர மாவட்டங்களை நெருங்க முற்படும்.அது கடல் பகுதியில் (Open water) எவ்வளவு நேரம் பயணிக்கறதோ அதற்கு ஏற்றார்போல தீவிரமடையும்.வட கடலோர மாவட்டங்களை ஒட்டிய குறிப்பாக கடலூர் - சென்னை இடைப்பட்ட கடலோர பகுதிகளை ஒட்டிய கடல் பரப்பில் மிக சிறப்பான சூழல்கள் நிலவி வருகிறது ஆகையால் ஒரு வேளை அது #கடலூர் - #சென்னை இடையே கரையை கடக்க முற்படும் பட்சத்தில் தீவிர அல்லது மிக தீவிர புயலாகவும் கடலில் உருவெடுக்கலாம்.

துல்லியமாக அது இந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் கரையை கடக்கும் என்பதனை அது கரையை கடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தான் ஓரளவு உறுதிபட தெரிவிக்க இயலும்.நம்மிடம் இருக்கும் Technology யை கொண்டு இப்போதைக்கு இவ்வளவு தான் கூற முடியும்.

மாதிரிகளின் அடுத்த ஓட்டத்தில் டெல்டாவில் கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளதா  இல்லையா என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் #டெல்டாவில் கரையை கடந்தால் அது வலுகுறைந்த புயலாகவே கரையை கடக்கும்.

புதுச்சேரி , கடலூர் , சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டியது அவசியம்.

அதிகாரபூர்வ அறிக்கைக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகும் அறிவிப்புகளை பார்த்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் பிற்பகலில் அதனுடைய நகர்வுகள் தொடர்பாக பதிவிடுகிறேன்.

இது இயற்கையின் ஒரு நிகழ்வு அது நமது கட்டுப்பாட்டிற்கு எல்லாம் அப்பார்ப்பட்டது.அதனுடைய நகர்வை நம்மால் மாற்றி அமைக்க இயலாது சரியாக பின்தொடர்ந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம் பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.நான் அதனை பின்தொடர்வதை சரியாக செய்வதாகவே என்னுகிறேன்.இனிமேலும் அதையே செய்ய விரும்புகிறேன்.


#Emmanuel_paul_antony
#puducherry_weather
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக