12-11-2020 நேரம் மாலை 6:20 மணி இதுவரையில் இன்று #நெல்லை மாவட்டம் #பாளையங்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகளில் 20 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #கன்னியாகுமரி சுற்றுவட்டப் பகுதிகளில் 15 மி.மீ அளவு மழையும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது.
அனைத்து #Weather_bloggers களும் வடகடலோர மாவட்டங்களையே வாயை பிளந்து பார்த்துக்கொண்டு இருந்த தருணத்தில் (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்) Just for a joke 😁...தென்மாவட்டங்களில் மழை பதிவாகியது....தற்சமயம் நாம் எதிர்பார்த்த தென்மாவட்ட மேற்கு பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருவதை செயற்கைகோல் படங்களின் வாயிலாக அறிய முடிகிறது.
மேலும் #தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டிய கடல் பகுதிகளில் மழை மேகங்கள் குவிந்து இருப்பதை நீங்களே செயற்கைக்கோல் படங்களின் வாயிலாக காணலாம்.
இதுவரையில் பதிவாகி இருக்கும் மழை அளவுகளின் படி
===============
என்னூர் - 53 மி.மீ
நுங்கம்பாக்கம் - 30 மி.மீ
மீனம்பாக்கம் - 27 மி.மீ
பாளையங்கோட்டை - 20 மி.மீ
கன்னியாகுமரி - 15 மி.மீ
காரைக்கால் - 5 மி.மீ
இந்த மாறுதல்கள் இலங்கைக்கு தெற்கே இருக்கும் அந்த சுழற்சியின் நகர்வினை உறுதி படுத்துகின்றன.
அடுத்த சில மணி நேரங்களில் அல்லது அடுத்து வரக்கூடிய நாளில் நாம் எதிர்பார்த்த பிற பகுதிகளிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாக தொடங்கும் என நம்பலாம்.