11-11-2020 நேரம் பிற்பகல் 1:00 மணி நாம் எதிர்பார்த்ததை போல இலங்கைக்கு தெற்கே இருக்கும் அந்த சுழற்சி மேற்கில் நகர தொடங்கியது இன்று காலை #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அங்கும் இங்குமாக மழை பதிவாகி வந்ததை அறிய முடிகிறது.தற்சமயம் வட கடலோர மாவட்டங்கள் அருகே இருக்கும் வங்கக்கடல் பகுதிகளில் மழை மேகங்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வலுகுறைந்த சுழற்சியால் குவிந்து இருப்பதை காண முடிகிறது இது தொடர்பாக நேற்றைய நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர குரல் பதிவிலயே நாம் விரிவாக விவாதித்து இருந்தோம்.இன்று கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகும் நாளை உள் ,மேற்கு உள் , தென் உள் மற்றும் மேற்கு மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் 15-11-2020 ஆம் தேதி வாக்கில் மழையின் அளவு மேலும் தீவிரமடைய வாய்ப்புகள் உண்டு.
இது தொடர்பான விரிவான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
#கடல்_சார்_அலைவு களின் தாக்கம் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது #ITCZ இன் தற்போதைய நிலையை நான் இணைத்திருக்கும் இரண்டாவது படத்தின் வாயிலாக நீங்களே அறியலாம்.இந்த சூழல் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தென் தமிழகத்திற்கு மிகவும் சாதகமான சூழல். இது தொடர்பாகவும் நாம் குரல் பதிவில் விரிவாக விவாதிக்கலாம்.
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com