14-07-2020 நேரம் இரவு 9:00 மணி #திருச்சி மற்றும் #தஞ்சை மாநகரங்கள் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட டெல்டா மாவட்டங்களில் தற்சமயம் எந்த வித சூழல்கள் நிலவி வருகிறது என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை நான் பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைக்கோள் படங்களின் வாயிலாக உங்களுக்கே அது தெரிந்திருக்கும் மேலும் நாம் கடந்த பதிவில் சில மணி நேரங்களுக்கு முன்பு நாம் எதிர்பார்த்து இருந்தது போல #காரைக்கால் #மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகி வருவதை அறிய முடிகிறது மேலும் #திருவாரூர் #மன்னார்குடி சுற்றிவட்டப் பகுதிகளிலும் தற்சமயம் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இவைத்தவிர்த்து நாம் கடந்த குரல் பதிவில் தெரிவித்து இருந்தது போல நீண்ட நாட்களுக்கு பிறகு #நாகப்பட்டினம் பகுதிகளிலும் சொல்லும்படியான அளவிலான மழை மேகங்கள் பதிவாகி வருவது மகிழ்ச்சியாக உள்ளது.தர்சமயமும் #திருச்சி ,#தஞ்சை மாநகரங்களில் சிரப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #அம்மாப்பேட்டை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #தஞ்சை - #நீடாமங்கலம் இடைப்பட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே சிறப்பான மழை மேகங்கள் தற்சமயம் பதிவாகி வருகின்றன.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் #திருச்சி மாவட்டத்தில் பதிவாகும் வெப்பசலன மழையை அனுபவியுங்கள் தோழர்களே.
இதுவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி
===================
துவாக்குடி - 36 மி.மீ
ஆடுதுறை - 7 மி.மீ
திருச்சி விமான நிலையம் , காரைக்கால் உட்பட மேலும் சில பகுதிகளின் மழை அளவுகளுடன் நள்ளிரவை ஒட்டி ஒரு பதிவை பதிவிடுகிறேன்.
Enjoy the rain♥️...