23-06-2020 நேரம் மாலை 4:50 மணி நான் பிற்பகலில் குரல் பதிவில் நமது Youtube பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது போல தற்சமயம் #ராணிப்பேட்டை மாவட்டம் #காவிரிப்பாக்கம் , #அய்யம்பேட்டை , #வாலாஜாபேட்டை மற்றும் #திருவண்ணாமலை மாவட்டம் #ஆரணி அருகே மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன.நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அடுத்த சில மணி நேரங்களில் வேலூர் , காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் மேலும் நான் காலையில் பதிவிட்டு இருந்தது போல இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் உட்பட #செங்கல்பட்டு , #சென்னை , #திருவள்ளுர் , #விழுப்புரம் , #புதுச்சேரி , #கடலூர் , #மயிலாடுதுறை , #நாகப்பட்டினம் , #காரைக்கால் உட்பட வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் குரல் பதிவு செய்திருக்கிறேன் முடிந்தால் அதனை ஒருமுறை கேட்டுவிடுங்கள் - https://youtu.be/6yzISwIldm4
தென்மேற்கு வங்கக்கடல் மேலடுக்கு சுழற்சி
=============================
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்சமயம் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அது மேலும் மேற்கு நோக்கி நகர்கையில் வட கடலோர மாவட்டங்களில் கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ முதல் 6 கி.மீ கள் உயரத்தில் கிழக்கு திசை காற்று மிக சாதகமாக குவிய வாய்ப்புகள் உள்ளது ஆகையால் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் வட கடலோர மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் நிலவும் சுழல்களை போல ஒரு சூழலை உங்களால் உணர முடிந்தால் ஆச்சரியம் கொள்ள தேவையில்லை. அதற்கு காரணம் இந்த மேலடுக்கு சுழற்சி தான் தற்காலிகமாக அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கும் அதே சுழல்களே தொடரும்.
மேலும் அந்த மேலடுக்கு சுழற்சி மேலும் மேற்கு அல்லது வட மேற்கு அல்லது வட-வட மேற்கு திசையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் நகர முற்படுகையில் அதனுடைய நகர்வுகளைப் பொறுத்து தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு சிறப்பான மழை பதிவாகலாம்.